மெட்ரோ பயணிகளுக்கான புதிய வசதி – பெண்களே இயக்கும் இணைப்பு வாகனங்கள்!
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக இணைப்பு வாகன வசதியை ஏற்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இணைப்பு வாகனம்:
சென்னையில் தற்போது 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்காக ரூ. 69.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சென்னையில் மெட்ரோ ரயில்கள் மக்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பயணிகள் விரைவாக மெட்ரோ ரயில் நிலையத்தை அடையும் நோக்கிலும் அங்கிருந்து அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல ஏதுவாகவும் இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பெண்களே இயக்கும் வசதியை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதனை செயல்படுத்த தற்போது மெட்ரோ நிர்வாகம் தனியார் நிறுவனங்களுடன் கலந்தலோசித்து வருகிறது. விரைவில் பெண்களை இயக்கும் இருசக்கர மற்றும் 4 சக்கர இணைப்பு வாகன வசதி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download