5 ரூபாய் கட்டணத்தில் மெட்ரோ ரயில் பயணம் – நிர்வாகத்தின் அசத்தல் அறிவிப்பு! மகிழ்ச்சியில் மக்கள்!
கேரளா மாநிலம் கொச்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் இன்றுடன் 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. அதனால் இன்று ஐந்து ரூபாய் கட்டணத்தில் எந்த ரயில் நிலையத்தில் இருந்தும் எந்த நிலையம் வேண்டும் என்றாலும் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் சேவை:
கேரளாவில் கொச்சியில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆலுவா முதல் பேட்டை வரை 25 கிலோ மீட்டர் தொலைவில் மெட்ரோ ரயில் சேவை இருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது. இன்றுடன் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. அதனால் மெட்ரோ நிர்வாகம் புதிய சலுகை ஒன்றை பொது மக்களுக்கு வழங்கி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதன் படி ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு எந்த ரயில் நிலையத்திற்கு செல்லவும் பயணிகள் ரூபாய் 5க்கு பயணச் சீட்டு எடுத்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த சீட்டை பயன்படுத்தி எந்த நிலையத்தில் இருந்தும் எந்த நிலையம் வேண்டும் என்றாலும் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இன்று ஒரு நாள் மட்டுமே அந்த சலுகை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு உத்தரவு அமல் – வன்முறை எதிரொலி! அரசு முடிவு!
அதனால் பொதுமக்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதிநவீன தொழில்நுட்பத்துடன் செயல்பட்டு வரும் கொச்சி மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்போது குறைவான கட்டணத்தில் சேவை வழங்கப்படுவதால் மக்கள் அதிகம் பேர் கொச்சி மெட்ரோ ரயில் நிலையங்களில் காணப்படுகின்றனர். கேரளாவின் வணிக மையமாக அழைக்கப்படும் கொச்சியில் இப்படி ஒரு அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.