தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு – முதல்வர் அறிவிப்பு!

0
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு - முதல்வர் அறிவிப்பு!
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு - முதல்வர் அறிவிப்பு!
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு – முதல்வர் அறிவிப்பு!

விடுதியில் தங்கி பயிலும் அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான உணவுப்படி தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

உணவுப்படி உயர்வு:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது அரசு பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான உணவுப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அரசு பள்ளி மாணவர்கள் விடுதியில் தங்கிப் பயில்வதற்கு மாதம் ரூ. 1,000 உணவுப்படியாக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 1400 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

நவராத்திரிக்கு முன் வரும் நல்ல செய்தி – 3% அகவிலைப்படி உயர்வு குறித்த அப்டேட்!

இதனை அடுத்து, கல்லூரி மாணவர்களுக்கு உணவுப்படியாக மாதந்தோறும் ரூ. 1100 வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ரூ. 1500 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பால் ஒரு லட்சத்து 21,244 மாணவ மாணவிகள் பயனடைவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாணவ மாணவியர்கள் தங்கும் விடுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு மாணவர்கள் தங்கும் அறைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!