தமிழகத்தில் ரேஷன் வாங்குவதில் புதிய மாற்றம் – பொதுமக்கள் குழப்பம்!

0
தமிழகத்தில் ரேஷன் வாங்குவதில் புதிய மாற்றம் - பொதுமக்கள் குழப்பம்!
தமிழகத்தில் ரேஷன் வாங்குவதில் புதிய மாற்றம் - பொதுமக்கள் குழப்பம்!
தமிழகத்தில் ரேஷன் வாங்குவதில் புதிய மாற்றம் – பொதுமக்கள் குழப்பம்!

தமிழக ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் வந்து ரேகை வைத்தால் தான் ரேஷன் பொருள் வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் பொருள்:

தமிழகம் முழுவதும் உள்ள 3,300 ரேஷன் கடைகளின் வாயிலாக பிஎச்எச் மற்றும் ஏஏஒய் ஆகிய வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த பிஎச்எச் மற்றும் ஏஏஒய் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒன்றிய அரசின் தொகுப்பில் இருந்து அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிஎச்எச் மற்றும் ஏஏஒய் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ரேஷன் கடைக்கு வந்து விரல் ரேகை பதிவு செய்தால் மட்டுமே ரேஷன் பொருட்களை பெற முடியும் ஒன்றிய அரசு மறைமுகமாக உத்தரவினை பிறப்பித்துள்ளது.

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு – முதல்வர் அறிவிப்பு!

ஆனால், தமிழக அரசு இது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மேலும், பிஎச்எச் மற்றும் ஏஏஒய் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து சம்மந்தப்பட்ட ரேஷன் கடைக்கு ரேகை வைக்க வர முடியாவிட்டால் உறுப்பினரின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. இதனால், பொதுமக்களின் மத்தியில் இந்த உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!