நவராத்திரிக்கு முன் வரும் நல்ல செய்தி – 3% அகவிலைப்படி உயர்வு குறித்த அப்டேட்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு நவராத்திரி பண்டிகை வருவதை முன்னிட்டு 3% அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு
நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் இந்த ஆண்டிற்கான இரண்டாவது அகவிலைப்படி உயர்விற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்புதல் கிடைத்ததும் நவராத்திரிக்கு முன்னதாகவே அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகலாம்.
BEL நிறுவனத்தில் ரூ.1,40,000/- ஊதியத்தில் வேலை – 230+ காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!
மேலும் நேற்று (அக்.4) மத்திய அமைச்சரவை மற்றும் அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழு ஆகிய இரண்டும் காலை 10:30 மணி கூடியது. இதில் அகவிலைப்படி உயர்வு குறித்து எப்போது அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நவராத்திரி விழா அக்டோபர் 15ம் தேதி தொடங்குகிறது, தசரா அக்டோபர் 24ம் தேதி வருகிறது. அதனால் அதற்கு முன்னதாக அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என அரசு ஊழியர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.