தமிழகம் முழுவதும் ஜூலை 10ம் தேதியன்று மெகா தடுப்பூசி முகாம் – கொரோனா அதிகரிப்பு எதிரொலி!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் பாதிப்புகளுக்கு மத்தியில் ஜூலை மாதம் 10ம் தேதியன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார்.
தடுப்பூசி முகாம்:
நாடு முழுவதும் கொரோனா பரவலின் புதிய பாதிப்புகள் மீண்டுமாக உயர்ந்து வரும் நிலையில் நோய்த்தடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தொற்று விகிதம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் அனைவரும் மீண்டுமாக முகக்கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் 10ம் தேதியன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்கு பின்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், ‘தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் சற்று உயர்ந்து வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி (DA) உயர்வு – பிட்மென்ட் காரணி அதிகரிப்பு!
இதற்காக சேலம், நாமக்கல், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி பதிவு செய்யப்படும் புதிய பாதிப்பில் 50 சதவீதம் சென்னையில் இருக்கிறது. அந்த வகையில் சென்னையில் மட்டும் சுமார் 2,225 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 92% பேர் வீடுகளில் தனிப்படுத்தப்பட்டுள்ளனர். இப்போது வரை தமிழகத்தில் பிஏ4, பிஏ5 வகை கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு வரும் ஜூலை மாதம் 10ம் தேதியன்று 1 லட்சம் இடங்களில் 31வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.