தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் – மே. 26 தற்செயல் விடுப்பு போராட்டம்!
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இது குறித்த அறிவிப்பை CPS ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழக அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பழைய ஓய்வூதிய திட்டம் சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை சுட்டி காட்டி தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்டந்தோறும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. அடுத்த கட்டமாக தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
ஆசிரியர்கள் ஜீன்ஸ் & லெக்கின்ஸ் அணியக் கூடாது.. மீறினால் நடவடிக்கை!
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி மே 26ம் தேதி அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.