தமிழகத்தில் ‘இவர்களுக்கு’ ஊதிய உயர்வு – வலுக்கும் கோரிக்கை!
தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு
தமிழகத்தில் உள்ள பல கிராமங்கள் தூய்மையாக இருக்க துப்புரவு தொழிலாளர்கள் பங்கு முக்கியமானதாகும். அந்த வகையில் கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் எனவும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் – மே. 26 தற்செயல் விடுப்பு போராட்டம்!
மேலும் அவர்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கி இருந்தால் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்காது. அதனால் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னையில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களின் கோரிக்கை சிலவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘