ஆசிரியர்கள் ஜீன்ஸ் & லெக்கின்ஸ் அணியக் கூடாது.. மீறினால் நடவடிக்கை!
அசாம் மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆடை கட்டுப்பாடு:
இந்தியாவில் மதிப்பிக்க பணியினை செய்யும் ஆசிரியர்களுக்கென்று சில வரைமுறைகளை மாநில அரசுகள் பின்பற்றி வருகிறது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலான ஆடைகளை அணிவதாக புகார்கள் எழுந்து வந்தது.
தமிழக கடைகளில் அதிகாரிங்கள் ஆய்வு – விதிமீறல்களுக்கு எச்சரிக்கை!
இது குறித்து ஆராயப்பட்டு தற்போது அம்மாநிலத்தில் ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் ஜீன்ஸ் மற்றும் லெக்கின்ஸ் போன்ற உடைகளை அணிய கூடாது. மேலும் பெண் ஆசிரியர்கள் சல்வார், சேலை உள்ளிட்ட ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அசாம் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆசிரியர்கள் ஆடை குறியீட்டை பின்பற்றுவது அவசியம் என்று தெரிவித்துள்ளது. மேலும் அரசின் இந்த ஆடை கட்டுப்பாடை பின்பற்றாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.