தமிழக கடைகளில் அதிகாரிங்கள் ஆய்வு – விதிமீறல்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் உள்ள கடைகளில் விதிமீறல்கள் நடைபெறுவதாக தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாரிகள் எச்சரிக்கை:
தமிழகத்தில் மொத்தம் மீன் சந்தைகள், இறைச்சி கடைகள், குளிர்பான கடைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் கடைகள் 2,891 இருக்கிறது. இதில் தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 775 கடைகளில் விதிமீறல்கள் நடைபெறுவதாக கண்டுபிக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளுக்கு சுமார் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆய்வுக்கு பின் தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகள் பேட்டி அளித்தனர்.
இன்ஜினியரிங், டிப்ளமோ மாணவிகளுக்கான ரூ.50,000 உதவித்தொகை – உடனே விண்ணப்பிக்கவும்!
அதில் எடை குறைவாக விநியோகம் செய்தல், தரப்படுத்தப்படாத எடையளவுகளை பயன்படுத்துதல் என பல விதிமீறல்கள் நடந்துள்ளது. அதனால் அவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சில்லறை விற்பனையை விட அதிகபட்ச விலை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை தொடரப்படும் என எச்சரித்துள்ளார். எடை அளவைகள் சட்டத்தின் கீழ் மீன், இறைச்சி கடைகளில் எடை குறைவாக விற்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
ஆனால் இது குறித்து மக்கள் புகார் அளிக்க தமிழ்நாடு சட்ட அளவியல் துறையானது மொபைல் அடிப்படையிலான மற்றும் இணைய அடிப்படையிலான புகார் கண்காணிப்பு அமைப்பு (TN – LMCTS) செயலி அறிமுகம் செய்துள்ளது.
Exams Daily Mobile App Download