குறைவான வாடைகைக்கு திருமண மண்டபம் – அரசின் புதிய நடவடிக்கை!
சாமானிய பொதுமக்களும் குறைவான செலவில் திருமணம் செய்யும் நோக்கில் திருமண மண்டபங்கள் கட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
திருமண செலவு:
உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் பொதுமக்கள், இளைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சாமானிய மக்களும் மிகவும் பிரம்மாண்டமாக திருமணங்களை நடத்துவதற்காக கிராமங்கள்தோறும் திருமண மண்டபங்களை கட்டும் திட்டம் தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது.
ரோகினி முகத்திரையை கிழிக்கும் மீனா.. விஜயா தலையில் விழுந்த இடி – “சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!
இந்நிலையில், திருமண மண்டபங்கள் கட்டும் பணி முழுமையாடைந்தவுடன் குறைவான செலவிலேயே பிரம்மாண்டமாக திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் திறந்தவெளிகளில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகளை கட்டித் தருவதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கூடிய விரைவில் பொதுமக்களின் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டும் பணி துவங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.