ரோகினி முகத்திரையை கிழிக்கும் மீனா.. விஜயா தலையில் விழுந்த இடி – “சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில் ரோகினி மனோஜ் திருமணம் நல்லபடியாக முடிந்துள்ள நிலையில், ரோகினி பற்றிய உண்மை எல்லாம் மீனா மூலம் விரைவில் குடும்பத்திற்கு தெரிய வர இருக்கிறது.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், பல தடைகளுக்கு மத்தியில் மனோஜ் ரோகினி கழுத்தில் தாலி தடுக்கிறார். ரோகினி வீட்டிற்கு வந்ததும் முத்துவை போலீஸ் பிடிக்க வருகிறது. அப்போது தினேஷிற்கு விபத்து நடந்ததாக சொல்ல, ரோகினி தனது தோழியை விட்டு பார்க்க சொல்கிறார். மறுபக்கம் மீனாவிடம் ரோகினி அம்மா நெருக்கமாக பழகுகிறார். அப்போது ரோகினியின் அம்மா மீனாவிடம் உண்மையை சொல்ல போகிறார்.
உ.பியில் ஆக. 08ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை!
மீனாவை மதிக்காமல் விஜயா இருக்க, அப்போது பொறுமையை இழந்த மீனா ரோகினியை பற்றிய உண்மையை எல்லார் முன்னிலையிலும் சொல்கிறார். அதை கேட்டு விஜயா அதிர்ச்சி அடைய அவருக்கு நெஞ்சுவலி வருகிறது. இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர, விஜயா பணத்தையும் இழந்து, பையன் வாழ்க்கையையும் இழந்து இருப்பதால் அடுத்து பெரிய திருப்பம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.