கொரோனாவால் மோசமாகி வரும் பள்ளிகள் – ஆய்வில் தகவல்!
கொரோனா காலத்திற்கு பிறகு படிப்படியாக மாணவர்களின் கல்வித்திறன் குறைந்து வருவதாக ஆய்வறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
பள்ளிகள்:
பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கொரோனா தொற்றுக்குப் பிறகு மாணவர்களின் கல்வித்தரம் எவ்வாறு இருக்கிறது என்பதை சோதனை செய்வதற்காக குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
Follow our Twitter Page for More Latest News Updates
இதன் அடிப்படையில், கொரோனா காலத்திற்கு பிறகு கல்வியின் திறன் படிப்படியாக மோசமாகி வருவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் தினமும் வகுப்புக்கு வருவதில்லை எனவும், 20 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தினமும் பள்ளிகளுக்கு வருவதாகவும் அதிர்ச்சி கலந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
குறைவான வாடைகைக்கு திருமண மண்டபம் – அரசின் புதிய நடவடிக்கை!
மேலும், ஆசிரியர்கள் முறையாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதில்லை எனவும், பள்ளியின் உள்கட்டமைப்பும் மோசமாக உள்ளதாகவும், மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவு தரமற்றதாகவும், பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகளும் நேர்த்தியாக இல்லை என பொருளாதார நிபுணர் ஜீன்ட்ரேஸ் முக்கிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.