
சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. ஊட்டி, கொடைக்கானலில் நுழைய இந்த ஆவணம் கட்டாயம்.. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு..
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பள்ளி விடுமுறை நாட்களை கழிக்க ஏராளமானோர் சுற்றுலா செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதை நிர்வகிக்க ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டது. அந்த நடைமுறை ஆனது தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, “2025 ஆம் ஆண்டு ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் கட்டாயம் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும் என கடந்த 13 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நீலகிரியில் இன்று (01-04-2025) முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வார நாட்களில் 6,000 வாகனங்களும் வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்கள் மட்டுமே அனுமதிப்படுகின்றன. இந்நிலையில் உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது”.























