
மத்திய அரசின் இலவச மருத்துவ சிகிக்சை திட்டம்…!! ரூ. 5 லட்சம் நிதிஉதவி பெறுவது எப்படி…?? இதோ உங்களுக்காக
மத்திய அரசு சாமானிய மக்களுக்கு பல்வேறு நல உதவி திட்டங்களை வழங்கி வருகிறது. அந்தவகையில், தற்போது மத்திய அரசின் “ராஷ்டிரிய ஆரோக்கிய நிதி” திட்டத்தின் கீழ் வழங்கப்படும் “சுகாதார அமைச்சரின் புற்றுநோய் நோயாளி நிதி” குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, இத்திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் நோயாளிகளுக்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் 27 பிராந்திய புற்றுநோய் சிகிக்சை மையங்களிலும் இலவசமாக சிகிக்சை அளிக்கப்படுகிறது. அதேபோல், இத்திட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பயன்பெற முடியாது. குறிப்பாக, இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற தாங்கள் சிகிக்சை பெறும் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரிடம் சிகிக்சைக்கான பதிவேட்டை அரசு முத்திரையுடன் கூடிய கையொப்பத்துடன் பெற்றிருக்க வேண்டும். மேலும், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க https://mohfw.gov.in என்ற மத்திய அரசின் இணையத்தளத்தில் முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

























