தமிழகத்தில் முக்கிய திருவிழா நாளை முன்னிட்டு திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சில கோவில்களில் நடைபெறும் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்படும். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் தேர்த் திருவிழா நடைபெறவுள்ளது.
Central Bank of India அலுவலக உதவியாளர் வேலை – தேர்வு எழுத தேவையில்லை!
அதனால் அந்த திருவிழா நடைபெறும் மார்ச் 11ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டுள்ளார். அந்த விடுமுறை நாளை ஈடு செய்ய அதே வாரத்தில் மார்ச் 16 ஆம் தேதியான சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.