மே 5 முதல் 19ம் தேதி வரை ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருவதால் ஒடிசாவில் மே 5 முதல் 19ம் தேதி வரை 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு அதிக தாக்கத்தை ஏற்படடுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 4 லட்சத்திற்கும் அதிகமான பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, பாதிப்பு எண்ணிக்கை 3.92 லட்சமாக உள்ளது. இது தொடர்பாக எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு அறிவித்தது போல் முழு ஊரடங்கு ஒன்று தான் வழி என்று அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
ஒடிசா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 10,413 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதனால் இதுவரை தொற்று பாதித்தவர்களின் 4.5 லட்சமாக அதிகரித்து உள்ளது. இதனால் அங்கு மே 5ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு 14 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை முழுமையான பணிநிறுத்தம் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
Puducherry Election Result – பாஜக தொடர் முன்னிலை!
ஊரடங்கின் போது, மருத்துவ காரணங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் தவிர, சாலை வழியாக தனிநபர்களின் உள்-மாநில இயக்கம் தடைசெய்யப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், மால்கள், சினிமா தியேட்டர்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.