தமிழகத்தில் அக்.30 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கலெக்டரின் அதிரடி உத்தரவு!

0
தமிழகத்தில் அக்.30 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - கலெக்டரின் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் அக்.30 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - கலெக்டரின் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் அக்.30 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கலெக்டரின் அதிரடி உத்தரவு!

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாக்களை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கு அக்டோபர் 30ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் விடுமுறை:

இந்திய சுதந்திரப் போராட்ட களத்தில் தமிழகத்திலிருந்து சேவையாற்றிய முக்கிய தலைவர்களில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒருவர் ஆவார். இவரது தியாகம் மற்றும் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாக்கள் சிறப்பிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டு 116 ஆவது தேவர் பிறந்த நாள் மற்றும் 61வது குருபூஜை விழா வரும் அக்டோபர் 30-ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது.

சமையல் சிலிண்டர் ரூ.500க்கு வழங்க முடிவு – மாநில அரசு அறிவிப்பு!!

இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் தேவரின் நினைவு இடத்தில் மரியாதை செலுத்த வருவார்கள். இதன் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த உள்ளூர் விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் மற்றொரு வேலை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!