தமிழகத்தில் ஜூலை 12ம் தேதி வரை மதுபானக்கடைகள் அடைப்பு – அறிவிப்பு வெளியீடு!
வரும் ஜூலை 9ம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருப்பதை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்கு அருகில் இருக்கும் மதுபானக்கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுபானக்கடைகள் மூடல்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பில் காலியாக இருக்கும் ஒரு சில இடங்களை நிரப்புவதற்கு தற்காலிக தேர்தல் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடங்களில் செயல்படும் அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி வரைக்கும் ராஜினாமா, இறப்பு உள்ளிட்ட காரணங்களால் ஊரக உள்ளாட்சி அமைப்பில் பல்வேறு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் அவிநாசி ஒன்றியத்தில் உள்ள 16வது வார்டு உறுப்பினர், பல்லடம் ஒன்றியத்தில் உள்ள 1வது வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் காலியாக இருக்கிறது. மேலும், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் இச்சிப்பாளையம் ஊராட்சி தலைவர், அவிநாசி ஒன்றியத்தில் உள்ள அய்யம்பாளையம் ஊராட்சியின் 6வது வார்டு உறுப்பினர், குடிமங்கலம் ஊராட்சியில் 1வது வார்டு உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளது.
அந்த வகையில் இந்த காலியிடங்களுக்கு ஜூலை 9ம் தேதியன்று தற்செயல் தேர்தல் மற்றும் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இப்போது உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்கு அருகில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். இந்த உத்தரவானது ஜூலை காலை 10 மணி முதல் சனிக்கிழமை இரவு 12 மணி வரையிலும் கடைபிடிக்கப்பட வேண்டும். தவிர வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 12ம் தேதியன்றும் மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.