கூட்டுறவு வங்கிகளில் காலிப்பணியிடங்கள் – நேர்காணல் தேர்வு!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் உள்ள எழுத்தாளர் மற்றும் உதவியாளர் பதவிகளுக்கான அறிவிப்பு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியானதை தொடர்ந்து அந்த பதவிகளுக்கான தேர்வுகள் கொரோனா காரணமாக நடத்தப்படாததால், நேர்முக தேர்வு நடத்தப்பட்டு ஆட்களை தேர்வு செய்யும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டது.
கூட்டுறவு வங்கி பணிகள்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கூட்டுறவு சங்கத்தின் சார்பில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் உள்ள எழுத்தாளர் மற்றும் உதவியாளர் பணிகள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி வெளியிட்டது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கூட்டுறவு பயிற்சி மற்றும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தமிழக அரசுப்பள்ளிகளில் 400 ஆசிரியர் பணியிடங்கள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
இந்த பணிகளுக்கான பணியாளர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படவில்லை. எனவே நேர்காணல் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டது. இதன்படி நேர்முக தேர்வு நேற்று கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மண்டல இணைப் பதிவாளர் சந்தானம் குலுக்கல் முறையில் நேர்காணல் தேர்வுக்கு வந்தவர்களை தேர்ந்தெடுத்து அமரவைத்தார்.
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு – 85% மாணவர்கள் வருகை!!
57 காலியிடங்களுக்கான தேர்வில் 115 பேர் கலந்து கொண்டனர். இந்த நேர்காணல் தேர்வில், துணைப் பதிவாளர்கள் ராதாகிருஷ்ணன், சரவணன், ராஜதுரை, சம்பத்குமார், சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர். நேர்காணல் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி அடைந்தவர்களின் விவரம் விரைவில் வெளியிடப்பட்டு பணிநியமன ஆணை வழங்கப்படும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்