தமிழக அரசுப்பள்ளிகளில் 400 ஆசிரியர் பணியிடங்கள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள 35 நடுநிலை பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாகவும், 40 உயர்நிலை பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்துவது குறித்து தமிழக அரசின் உத்தரவின்படி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தரம் உயர்த்தப்படும் பள்ளிகள்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. நேற்று முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பல நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் 85% மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – இந்த மாதம் அமல்!!
இதன்படி தற்போது தமிழகத்தில் உள்ள 35 நடுநிலை பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தவும், 40 உயர்நிலை பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தவும் ஏற்கனவே சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகிறது.
தமிழக சட்டக்கல்லூரிகள் நவீனமயமாக்கல் – அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு!!
இதன்படி 35 நடுநிலை பள்ளிகளிலும், 40 உயர்நிலை பள்ளிகளிலும் ஒரு பள்ளிக்கு 9 ஆசிரியர்கள் வீதம் 360 ஆசிரியர்களும், 40 கணினி ஆசிரியர்களும் என மொத்தம் 400 ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். இதற்கு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 41.11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
School க்கு Library ஆள் போடுங்கப்பா அப்ப தான் கல்வி வளர்ச்சி அடையும்