தர்மபுரி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு !
தர்மபுரி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30-01-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தர்மபுரி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் |
பணியின் பெயர் | உதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 30.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக காலிப்பணியிடங்கள்:
தருமபுரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உதவியாளர் வயது வரம்பு:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
DEO கல்வி தகுதி:
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணிணி கல்வியில் பட்டயப்பயிற்சி (Diploma in Computer Application) மற்றும் ஆங்கிலம்/தமிழ் முதுநிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
கணிணி இயக்குபவர் மாத ஊதியம்:
தேர்வு செய்யப்படும் நபருக்கு ஒரு மாதத்திற்கு தொகுப்பூதியம் ரூ.9,000/- வழங்கப்பட உள்ளது.
Data Entry Operator விண்ணப்பிக்கும் முறை:
WWW.dharmapuri.nic.in என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, தகுதியுள்ள விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் 30.01.2021 மாலை 5.45 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.
முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தருமபுரி.