பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு – அண்ணா பல்கலை அறிவிப்பு!!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகள் மற்றும் அதன் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் பிப்ரவரி மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் புதிய தேதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொறியியல் தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத மத்தியில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் இறுதிப்பருவம் தவிர்த்து பிற மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகளும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் சற்று குறைந்த காரணத்தால் கல்லூரிகளை திறக்க வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு – 85% மாணவர்கள் வருகை!!
அதன்படி கடந்த டிசம்பர் மாதம் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. பிற மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலை சார்பில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கான தேர்வு அட்டவணையும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டது.
தமிழக அரசுப்பள்ளிகளில் 400 ஆசிரியர் பணியிடங்கள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
கேட் தேர்வுகள் இடையில் நடைபெற உள்ளதால், பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் அட்டவணையில் சில தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி 6 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள், பிப்ரவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான முழு தேர்வு அட்டவணையை மாணவர்கள் https://aucoe.annauniv.edu/timetable.php என்ற இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்