மே 8 முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
கேரள மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக உள்ளதால் மே 8 முதல் 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு அமல்:
கேரள மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்திற்கு மேல் பதிவாகியுள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிவிப்பின் படி, மே மாதம் 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் முழு ஊரடங்கின் போதும் மளிகை, பால், காய்கறிகள், மருந்தகம் போன்றவை வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5,146 ஆசிரியர் பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு – அரசு உத்தரவு!!
பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் அவசர தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை மீறி வெளியே வருபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.