தமிழகத்தில் 5,146 ஆசிரியர் பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு – அரசு உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 5,146 தற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட உள்ளதாக அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடர் நீட்டிப்பு:
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2011-12ம் நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 5 முதல் 6 ஆம் வகுப்பு வரை 1282 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு 1581 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 6428 கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதன் பின்னர் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2000ன்படி,2011-2012 ஆம் ஆண்டு நடுநிலை பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 1581 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 5146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான பணி நீட்டிப்பு 1.1.2018 முதல் 31.12.2020 வரை வழங்கப்பட்டது. இந்த பணி நீட்டிப்பு தற்போது முடிவடைந்ததை தொடர்ந்து 1.1.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழகத்தில் தொலைதுார கல்விக்கு ஆன்லைனில் தேர்வு – இயக்குனர் அறிவிப்பு!
இந்நிலையில் தொடக்க கல்வி இயக்குநரின் கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது 5146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான பணி நீடிப்பை புதிய ஊதிய விகிதத்தின் படி 1.1.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டுகள் அல்லது அதற்கு மேல் நீடிப்பது குறித்து நிதி துறையின் மறு ஆய்வின் முடிவெடுக்கும் வரை தொடர் நீட்டிப்பு வழங்கலாம் என அரசு ஆணை வெளியிட்டுள்ளது.