பள்ளிகள் திறப்பு எதிரொலி – 52 ஆசிரியர்கள் & 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!!
கர்நாடகாவில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் மற்றும் ஜூனியர் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு சில தினங்களில் 52 ஆசிரியர்களுக்கும், 10 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடகாவில் பள்ளிகள் திறப்பு:
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் இந்தியா முழுவதும் மூடப்பட்டன. குறைந்து வரும் கொரோனா பரவல் காரணமாக கர்நாடகாவில் பள்ளிகள் 9 மாதங்களுக்கு பின் ஜனவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. முதற்கட்டமாக 10 -ஆம் வகுப்பு மற்றும் ஜூனியர் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன.
10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
இந்நிலையில் பள்ளிகள் திறந்து சில தினங்களில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரவி உள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் கூறுகையில், “அதிகஅளவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் சிலர் செய்தி பரப்பி வருகின்றனர். பள்ளிகள் செயல்பட விடாமல் செய்வதே அவர்களின் நோக்கம். மாணவர்கள் கல்வியின் நோக்கம் அறிந்து பள்ளிக்கு அதிக அளவில் வருகின்றனர். இந்த செய்தி குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
2020-ஆண்டில் 8,927 மணி நேரம் இணைய சேவை தடை- ரூ20,500கோடி இழப்பு!!
அதன் முடிவில் கடந்த சில தினங்களில் கர்நாடகாவில் 52 ஆசிரியர்களும், 10 மாணவர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெலகாவில் 22 ஆசிரியர்களும், சித்ரதுர்கா, சிக்கமகளூரு, விஜயபுரா ஆகிய 3 மாவட்டங்களில் தலா 5 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த ஆசிரியர்கள் & மாணவர்கள் இருந்த 26 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் அந்த பள்ளிகளுக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்