10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

0
10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு?- வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!!
10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு?- வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!!
10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு?- வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!!

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் பொங்கல் பண்டிகைக்கு பின் திறப்பது குறித்து தகவல் வெளிவந்த நிலையில், பள்ளிகள் திறந்தால் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு நடவடிக்கைகள்:

தமிழகத்தில் பள்ளிகள் வரும் ஜனவரி 18 தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியான நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு நவம்பர் மாதம் பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. அதில் அதிகப்படியான பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது ஒத்திவைக்கப்பட்டது.

2020-ஆண்டில் 8,927 மணி நேரம் இணைய சேவை தடை- ரூ20,500கோடி இழப்பு!!

இந்நிலையில் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் கடந்த டிசம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது பொதுத்தேர்வு நெருங்கும் சூழ்நிலையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு அதன் தொகுப்பினை அனைத்து பள்ளிகளும் முதன்மை கல்வி அலுவலரிடம் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதன் படி பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறந்தால் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

என்.ஆர்.ஐ மக்களுக்கு தபால் ஓட்டுகளுக்கு அனுமதி – வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல்!!

அதில் குறிப்பிட்டுள்ளவை,

1.வாரத்தில் சனிக்கிழமை உள்ளிட்ட 6 நாட்களும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

2. ஒவ்வொரு வகுப்பிலும் 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற மாணவர்கள் தனி தனி குழுக்களாக அமைத்து வகுப்பு நடத்த வேண்டும்.

3. ஒவ்வொரு மாணவர்க்கும் இடையே 2 மீட்டர் இடைவெளி விட்டு அமர வைக்க வேண்டும். பள்ளிக்கு வரும் போதும், கிளம்பும் போதும் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

4. பள்ளிகளில் வருகை பதிவு கட்டாயமில்லை, மாணவர்களை கட்டாயம் பள்ளிக்கு வர சொல்ல கூடாது. நேரடி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாத மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை கவனிக்கலாம்.

5. தனியார் பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையிடம் அனுமதி பெற்று பின் பள்ளிகளை திறக்க வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்கள், தங்களது பெற்றோர்களிடம் அனுமதி கடிதம் பெற்று பள்ளிக்கு வர வேண்டும்.

6. மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.

7. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் சத்து மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் போன்றவை வழங்கப்படும்.

8. பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவை தவிர்க்க வேண்டும்.

9. பள்ளி வளாகத்தை உரிய கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

10. அவசர உதவி, மருத்துவ உதவி, அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் தொலைபேசி எண் மற்றும் விபரங்களை, பள்ளிகளில் பட்டியலிட்டு வைத்திருக்க வேண்டும்.

11. பள்ளிகளில் மாணவர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி வாயில்கள் அமைக்க வேண்டும்.

12. மழை இல்லாத நேரங்களில் மரத்தடியில், மைதானங்களில் மாணவர்களை அமர்த்தி பாடங்கள் நடத்த வேண்டும்.

13. விளையாட்டு, என்சிசி, என்.எஸ்.எஸ் போன்ற நடவடிக்கைகளுக்கு தற்போது அனுமதி இல்லை, கலை, நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!