நவீன மயமாகும் “HYUNDAI”…155 பேருக்கு வேலைவாய்ப்பு..!! ” முழு தகவலுடன் உள்ளே”..!!
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகள் தொழில் நகரங்களாக உருவெடுத்து வருகிறது. மேலும், அங்கு நிறுவப்படும் தொழிற்சாலைகளால் அதிக வேலைவாய்ப்புகள் கிடைப்பதால், பல்வேறு பட்டதாரி இளைஞர்கள் இதன் மூலம் பயனடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள “HYUNDAI” நிறுவனம் பற்றிய புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
TNPSC குரூப் 5 அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
அதாவது, “HYUNDAI” நிறுவனமானது, காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக் கோட்டையில் 5.40 லட்சம் சதுர அடியில், 19,706 பணியாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. மேலும், தற்போது ரூ.1500 கோடி முதலீட்டில், கூடுதலாக 1.81 லட்சம் சதுர பரப்பளவில் இந்த தொழிற்சாலையை நவீன மயமாக்க உள்ளதாக “HYUNDAI” நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இதன் மூலம் 155 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதையும் உறுதி செய்துள்ளது.


























