தமிழகத்தில் ஜூன் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு அன்றைய தினம் அம்மாவட்டத்திற்கு ஆட்சியர் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
ராமநாதபுர மாவட்டம் கீழக்கரையில் உள்ள ஏர்வாடி தர்ஹாவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை காண தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் பங்கேற்பர். 2023 ம் ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா ஜூன் 12ம் தேதி மாலை தொடங்கவுள்ளது. அதன் பிறகு ஜூன் 13ம் தேதி அதிகாலை தர்கா மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.
தமிழகத்தில் பீடி, சிகரெட் விற்பனை செய்ய தனி உரிமம் – புது நடைமுறை விரைவில் அமல்!
அதில் மேளதாளங்கள் முழங்க யானைகள் அணிவகுப்புடன் நாட்டிய குதிரைகள் நடனமாட, சந்தனக்கூடு பவனி உலா வரும். இத்தகைய முக்கிய நிகழ்வை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வண்ணம் ஜூன் 24 ( சனிக்கிழமை) வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.