ஜன.22ம் தேதி பொது விடுமுறை ரத்து – உயர்நீதிமன்ற வழக்கு!
ஜனவரி 22 ஆம் தேதி அன்று மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்தான வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொது விடுமுறை:
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமரின் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதியான நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அனைத்திற்கும் நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை பின்தொடர்ந்து இதுவரையிலும் 11 மாநில அரசுகள் ஜனவரி 22 ஆம் தேதி அன்று பொது விடுமுறை நாளாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை எதிர்த்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 சட்டக் கல்லூரி மாணவர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளனர்.
அடல் பென்ஷன் திட்ட ஓய்வூதியம் ரூ.7000 ஆக உயர்வு – கடும் எதிர்பார்ப்பு!!
அதன் மனுவில் பதவியில் இருக்கும் அரசு தன் விருப்பத்திற்கு ஏற்ப பொது விடுமுறை அறிவிக்க முடியாது. மத நிகழ்ச்சியை கொண்டாட பொது விடுமுறை அறிவித்தது அரசியல் சாசனத்தின் மதசார்பின்மை கொள்கையை மீறும் வகையில் உள்ளது. அரசு எந்த மதத்துடன் தொடர்பு கொள்ளவும், ஊக்குவிக்கவும் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை சிறப்பு அமர்வு இன்று மும்பை உயர் நீதிமன்றத்தின் குல்கர்னி மற்றும் நிலா கோக்கலே ஆகிய நீதிபதி தலைமையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.