அடல் பென்ஷன் திட்ட ஓய்வூதியம் ரூ.7000 ஆக உயர்வு – கடும் எதிர்பார்ப்பு!!
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் பெறப்படும் ஓய்வூதிய தொகை ரூ. 7000 ஆக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வூதியம்:
இந்தியாவில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த இடைக்கால பட்ஜெட்டில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலமாக பெறப்படும் ஓய்வூதியத் தொகை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, அமைப்புசாரா துறையுடன் தொடர்புடைய ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ. 1000 முதல் அதிகபட்சமாக ரூ. 5000 வரையிலும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் ரூ.1000 + பொங்கல் பரிசு தொகுப்பு – எழும் புகார்கள்!
இந்நிலையில், அடல் ஓய்வூதியத்தின் கீழ் பெறப்படும் அதிகபட்ச தொகையை ரூ.5000த்தில் இருந்து ரூ. 7000 ஆக உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அதிகபட்ச ஓய்வூதிய தொகை ரூபாய் ஏழாயிரம் ஆக உயர்த்தபட்டால் கிட்டத்தட்ட 5.3 கோடிக்கும் அதிகமான பங்குதாரர்கள் பயன்பெறுவார்கள்.