அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய முயற்சி – மாணவர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வரும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் புதிய முயற்சி காரணமாக ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது.
புதிய முயற்சி:
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பொறியியல்கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. பொறியியல் பயின்று வரும் மாணவர்களுக்கான எதிர்கால நன்மை கருதி பல்வேறு சிறப்பு திட்டங்களும் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது மீடியா சயின்ஸ் துறையில் பயின்று வரும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் புதிய பயிற்சியுடன் கூடிய திறன் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதற்காக அயாதி ஒர்க்ஸ் என்ற தனியார் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியுடன் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து உள்ளது. டிஜிட்டல் சயின்ஸ் துறையில் மாணவர்களின் திறனை வளர்த்து, அவர்களின் வேலை வாய்ப்பு உங்களை எளிதாக உறுதி செய்வதற்காக இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பயிற்சிக்கு டிஜிட்டல் அட்வர்டைசிங் 360 டிகிரி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்.06ம் தேதி மின்தடை – உங்க ஏரியா இந்த லிஸ்ட்ல இருக்கானு செக் பண்ணுங்க!
டிசம்பர் மாதம் வரையிலும் 100 மாணவர்களுக்கு திட்டமிட்டுள்ள பயிற்சி அட்டவணையின் படி பல்வேறு கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. துறை சார்ந்த எதிர்கால மற்றும் தற்போதைய விஷயங்கள் குறித்தும், மாணவர்கள் வேறு என்ன புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற பல்வேறு பயிற்சிகளும் இதன் மூலம் அளிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக இத்துறை மாணவர்கள் கல்வி பயின்ற உடன் அவர்களின் வேலை வாய்ப்பு என்பது உறுதி செய்யப்பட்டு விடுகிறது.