இந்தியாவில் முழு ஊரடங்கு? பிரதமர் மோடி மறைமுக தகவல்!!
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பேரிடர் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
முழு ஊரடங்கு:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் நோய் பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா நோய்த்தொற்று காரணமாக மார்ச் மாதம் 23 ஆம் தேதி துவங்கி முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. மீண்டுமாக கொரோனா பரவலின் வேகம் குறைந்து வந்ததை தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் முதல் கொரோனா தாக்கம் மீண்டுமாக உயர துவங்கியுள்ளது.
நாளொன்றுக்கு 3 லட்சம் வரை புதிய பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்தியாவில் மஹாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அந்தந்த மாநிலங்களில் தேவையான நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. முன்னதாக கடந்த வருடம் ஏற்படுத்தப்பட்ட பொது முடக்கத்தினால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டது. மக்களின் அன்றாட, அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத சூழல் நிலவியது. அதனால் இந்த இரண்டாம் அலையை எதிர்கொள்ள நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை – மாநில அரசு உத்தரவு!!
கடந்த ஆண்டை பார்க்கும் போது பொது முடக்கத்தினால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது நாடு முழுவதும் கொரோனா பரவல் ஆயிரங்களை தாண்டி இருந்தது. பலி எண்ணிக்கையும் ஆயிரங்களுக்குள்ளாக இருந்தது. ஆனால தற்போது பரவி வரும் நோய் தொற்றால் ஒரு நாளைக்கு 3 லட்சம் புதிய பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த ஆண்டை போல பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டால் மட்டுமே இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் இறைச்சி கடைகள் மூடல் – ஆணையர் உத்தரவு!!
ஆனால் கொரோனாவுக்கு எதிரான போரில் பொது முடக்கம் என்பது கடைசி ஆயுதம் மட்டுமே என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். கொரோனா தடுப்பூசி மேல் உள்ள நம்பிக்கையின் காரணமாக தான் பொதுமுடக்கம் அறிவிக்கப்படவில்லை என பரவலான கருத்துக்கள் நிலவி வருகிறது. மேலும் சில மாநிலங்களில் நடைபெற்று வரும் தேர்தல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. என்றாலும் மாநில அரசுகளின் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் போதுமான பலன் கிடைக்கவில்லை என்றால் முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் என ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.