மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை – மாநில அரசு உத்தரவு!!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திருமண விழாக்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் டூ மாவட்டம் பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்:
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பெருகி வரும் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக நாடு முழுவதும் ஏற்படுகிற புதிய பாதிப்பில் மஹாராஷ்டிரா தான் முதலிடத்தில் உள்ளது. அதனால் அம்மாநிலத்தில் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் பொது முடக்கத்துடன், இரவுநேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் பொது முடக்கத்துக்கு ஈடாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து மஹாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மேலும் இந்த உத்தரவு மே மாதம் 1 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா அரசின் புதிய வழிகாட்டுதல் வழிமுறைகளின் படி,
தமிழக அரசு பேருந்துகள் இயக்கத்தில் புதிய மாற்றங்கள் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!!
- இரவு 8 மணி முதல் மே மாதம் 1 ஆம் தேதி வரை மாநிலத்தின் ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அத்தியாவசிய தேவை, மருத்துவ தேவைகளுக்காக லோக்கல் மற்றும் மெட்ரோ ரயில் சேவை இயக்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
- மாவட்டங்களுக்கு இடையேயான வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அவசர தேவைகள் ஏற்படின் பிற மாவட்டங்களுக்கு கார் மூலம் பயணிக்கலாம்.
- அரசு அலுவலகங்களில் 15% பணியாளர்களுக்கு அனுமதி.
- அரசு பேருந்துகளில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி.
- அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் யாரும் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அரசு அலுவலர்கள், மருத்துவ பணிகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
- திருமண விழாக்களில் 25 பேருக்கு மட்டுமே அனுமதி.
- திருமண விழாக்கள் 2 மணி நேரத்திற்கு மட்டுமே நடைபெற வேண்டும்.
- இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 50,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.