தமிழக அரசு பேருந்துகள் இயக்கத்தில் புதிய மாற்றங்கள் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக அரசு பேருந்துகள் இயக்கத்தில் சில மாற்றங்கள் அறிவித்துள்ளதாக போக்குவரத்துத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துதுறை அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கும், 24 ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட உள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
TN Job “FB Group” Join Now
இந்த நேரத்தில் அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை செயல்பட அனுமதி இல்லை. எனவே தமிழக அரசு போக்குவரத்துத்துறை சார்பில் செயல்பட்டு வரும் 8 போக்குவரத்து கழகங்களில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய போக்குவரத்துத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி கூறுகையில், “அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் என 1,20,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் 26 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!
அதில் முதலில் 45 வயதிற்கு மேற்பட்ட 70000 பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மற்றவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக மட்டுமே உள்ளது. இருந்தபோதிலும் பயணிகளுக்கு கொரோனா பரவலை தடுக்க அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. ஓட்டுனர்கள், நடத்துனர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு புதிய தேர்வு முடிவுகள் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!
இரவு ஊரடங்கு காரணமாக அனைத்து பேருந்துகளும் இரவு 10 மணிக்குள் சென்றடையும் வகையில் அந்த போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயண நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதனை பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் பேருந்து நிலையங்களில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. 50 சதவீத அரசு விரைவுப் போக்குவரத்து கழகப் பேருந்துகள் இரவில் இயக்கப்பட்டு வந்தன. தற்போது இவை பகலில் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு? கல்வியாளர்கள் அச்சம்!!
மேலும் பயணிகளில் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக சென்னையில் 300 முதல் 400 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன”, இவ்வாறு அவர் தெரிவித்தார். ஏற்கனவே தமிழகத்தில் பேருந்துகளில் கொரோனா பரவலை தடுக்க நின்று கொண்டே பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.