தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு? கல்வியாளர்கள் அச்சம்!!
தமிழகத்தில் குறையாமல் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமெடுத்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரவு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு அரசு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மே 5 ஆம் தேதி நடைபெற இருந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மே மாதம் நடைபெற இருந்த இந்த தேர்வுகள் ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறையாத காரணத்தினால் இந்த தேர்வுகள் நடத்துவது சாத்தியமில்லை.
மே 3 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மே மாதம் 2 ஆம் தேதி வெளியிடப்படும். எனவே ஆட்சி மாறுதலுக்கு பின்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் புதிதாக அமைத்து அதன் பின்னர் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இந்நிலையில் சிலர் ஆகஸ்ட் மாதம் இந்த தேர்வுகள் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் மீண்டும் பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Vaaippe illa