தமிழகத்தில் 26 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பெறாத கல்லூரிகள் சில செமஸ்டர் தேர்வுக்கான கட்டணத்தை பல்கலைக்கழகத்திடம் செலுத்தாத காரணத்தினால், அவ்வாறு செலுத்தாத 26 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான (ஏ.ஐ.சி.டி.இ) அந்தஸ்து பெற்று இயங்கி வருகின்றனர். இந்த கல்லூரி மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தேர்வு நடத்தப்படும். ஆனால் சில தன்னாட்சி கல்லூரிகளில் அண்ணா பல்கலைகழகத்திடம் இருந்து அங்கீகாரம் பெறாமல் செயல்படும். அந்த கல்லூரிகளில் பல்கலைக்கழக தேர்வுத்துறை மூலமாக தேர்வுகள் நடத்தப்படும்.
TN Job “FB Group” Join Now
மேலும் தேர்வு முடிவுகள், பட்டப்படிப்பு சான்றிதழ் போன்றவை பல்கலைக்கழகம் மூலமாக மட்டுமே வழங்கப்படும். அதற்காக மாணவர்களுக்கு கட்டணமும் வசூலிக்கப்படும். அந்த கட்டண தொகையை பல்கலைக்கழகங்களுக்கு அந்தந்த கல்லூரிகள் வழங்க வேண்டும். ஆனால் கொரோனாவால் கல்லூரிகள் திறக்கப்படாத காரணத்தினால் அந்த கட்டண தொகையை சில கல்லூரிகள் செலுத்தாமல் உள்ளன.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் – பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!!
எனவே அந்த கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு மார்ச் மாதம் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. எனவே சம்மந்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் இது குறித்து பல்கலைக்கழக்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் கட்டணத்தொகையை செலுத்தாத 26 கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் தேர்வு முடிவுகளை வழங்கவும், தாமதமின்றி தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தவும், கல்லுாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.