தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் இறைச்சி கடைகள் மூடல் – ஆணையர் உத்தரவு!!
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்குடன் கூடிய கட்டுப்பாட்டு நடைமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் ஞாயிற்று கிழமை அன்று அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கறிக்கடைகள் மூடல்:
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்று கிழமை அன்று பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கடைகள், ஹோட்டல்கள், சுற்றுலா தலங்கள், கடற்கரைகள் என அனைத்து இடங்களுக்கும் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தவிர மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்ற போதிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரு நாள் மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசு அறிவித்த கட்டுப்பாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தபட்டு வருகின்றனர்.
அனைவருக்கும் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் – மாநில அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விதிகளின் படி வார இறுதி நாளான ஞாயிற்று கிழமை அன்று அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட்டிருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாநகராட்சி ஆணையர் வெளியிட்டு உள்ள சுற்றறிக்கையில், ‘பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள வார இறுதி நாளான ஞாயிற்று கிழமையில் அனைத்து இறைச்சி கடைகளும் அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.