அரசின் காவல் துறை தேர்வில் நடந்த முறைகேடு.. ப்ளூடூத் கருவி பயன்படுத்தியது அம்பலம்!
பீகார் மாநிலத்தின் கயா பகுதியில் நடைபெற்ற காவலர்களுக்கான கான்ஸ்டபிள் தேர்வில் தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் முறைகேடு:
அரசு தேர்வு என்பது பலருக்கும் கனவாக இருந்து வருகிறது. படித்த பட்டதாரி இளைஞர்கள் அனைவரும் அரசு பணிக்காக தீவிரமாக பல வருடங்களாக தயாராகி வருவார்கள். ஆனால் குறுக்கு வழியில் சிலர் அரசு பணியை பெற்று விட வேண்டும் என்று முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வருவது செய்திகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இதனை தவிர்ப்பதற்காக அரசு தேர்வுகளில் தீவிரமாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏழை மக்களுக்கும் வங்கி சேவை – மத்திய அரசின் ஜன்தன் கணக்கு.. அமைச்சர் முக்கிய தகவல்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், பீகாரின் கயா பகுதியில் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமையான நேற்று நடத்தப்பட்டது. தேர்வு மையத்தில் சிலர் கேட்ஜெட் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால், அதிரடியாக தேர்வு மையங்களில் சோதனை செய்யப்பட்டது. அப்போது, 40 பேர் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு தேர்வில் ப்ளூடூத் கருவிகளைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
கயா நகர டிஎஸ்பி இது குறித்து, “இதுபோன்ற மோசடி நடக்க இருப்பதாக கிடைத்த தகவல் உண்மையாகிவிட்டது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 40 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தகுந்த சட்ட ரீதியான நடைமுறைகள் பின்பற்றப்படும்” என்று கூறியுள்ளார். தவறு செய்பவர்களை கண்டறிய வேண்டிய காவலர் பணிக்கு தேர்வெழுதும் நபர்களே இது போன்ற மோசடிகளை செய்வது வேதனைக்குரிய செயலாக உள்ளது. இதை போன்றே, உத்தரப் பிரதேச துணைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆரம்பத் தகுதித் தேர்வில் (UPSSSC PET) ஒருவர் வேறு நபரின் நுழைவுச் சீட்டைப் பயன்படுத்தி தேர்வெழுதி, பின்னர் அவர் கைது செய்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்