கலவரத்தால் நீடிக்கும் பதற்றம் – இணைய சேவைகளுக்கு தடை மேலும் நீட்டிப்பு!
மணிப்பூரில் கடந்த மாதம் முதல் தொடர்ந்து இரு தரப்பு மக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருவதால், இணைய சேவைகளுக்கு தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இணைய சேவை:
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி இனத்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து கோரியுள்ளனர். ஆனால், குகி மற்றும் நாகா பழங்குடியின மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த இரண்டு தரப்பு மக்களுக்கும் இடையில் கடந்த மாதம் மோதல் ஏற்பட்டது. மணிப்பூரில் துணைராணுவ படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும், கலவரம் குறைந்தபாடில்லை.
வாட்ஸ்அப்பில் Text Size ஐ மாற்றிக்கொள்ளலாம் – வெளியான புதிய அப்டேட்!
எனவே, மணிப்பூர் அரசு கடந்த மாதம் முதல் அங்கு இணைய சேவைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. ஜூலை 5ம் தேதி வரை இறுதியாக அறிவிக்கப்பட்ட உத்தரவு தற்போது மேலும், நீட்டிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.