இடைவிடாமல் பெய்து வரும் கனமழை – வெள்ளப்பெருக்கு அபாயம்!

0
இடைவிடாமல் பெய்து வரும் கனமழை - வெள்ளப்பெருக்கு அபாயம்!
இடைவிடாமல் பெய்து வரும் கனமழை - வெள்ளப்பெருக்கு அபாயம்!
இடைவிடாமல் பெய்து வரும் கனமழை – வெள்ளப்பெருக்கு அபாயம்!

இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் இரவும் பகலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பொதுவாகவே ஜூலை மாத இறுதியில் இருந்தே கர்நாடகா மாநிலத்தில் பருவமழை துவங்கும் நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாத துவக்கத்திலிருந்து பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்களின் இயல்புநிலை அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தக்சின கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்து இருக்கிறது.

கலவரத்தால் நீடிக்கும் பதற்றம் – இணைய சேவைகளுக்கு தடை மேலும் நீட்டிப்பு!

இந்நிலையில், கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், தக்சின கனடா, உடுப்பி, சிக்கமங்களூரு மற்றும் குடகு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி தற்போது வரை இருவர் உயிரிழந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்திருக்கிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்லும் பணியும் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!