தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க மறு வாய்ப்பு!
தமிழகத்தில் 10 ,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் முதல் தொடங்க உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு:
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் -13ம் தேதி தொடங்கி ஏப்ரல் – 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர். அதனை தொடர்ந்து 11 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் – 14ஆம் தேதியும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.
தமிழகத்தில் கவுன்சிலர்களுக்கு ஊதியம் – சென்னை மேயர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
Follow our Instagram for more Latest Updates
தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அடுத்தாக 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வின் முடிவுகள் மே – 5ம் தேதி வெளியாக உள்ளது. அதே போல 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 17ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க மறு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தனித்தேர்வர்கள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.