தமிழகத்தில் கவுன்சிலர்களுக்கு ஊதியம் – சென்னை மேயர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

0
தமிழகத்தில் கவுன்சிலர்களுக்கு ஊதியம் - சென்னை மேயர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
தமிழகத்தில் கவுன்சிலர்களுக்கு ஊதியம் - சென்னை மேயர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
தமிழகத்தில் கவுன்சிலர்களுக்கு ஊதியம் – சென்னை மேயர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

தமிழகத்தில் கவுன்சிலர்களுக்கு மாதம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பேசிய சென்னை மேயர் பிரியா விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என்று கூறியுள்ளார்.

கவுன்சிலர்களுக்கு ஊதியம்:

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களை போல தங்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து ஆலோசிக்கப்பட்டு 2023 புத்தாண்டு பரிசாக தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து அகவிலைப்படி 34% -லிருந்து 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதை செய்தால் மட்டுமே பென்ஷன்.. ஜன.31 இறுதி தேதி – ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ராஜஸ்தான் உத்தரவு!!

Follow our Instagram for more Latest Updates

இதன் மூலம் தமிழகத்தில் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். அடுத்ததாக அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்தும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்களை தொடர்ந்து தற்போது கவுன்சிலர்களுக்கு ஊதியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அதில் கவுன்சிலர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த துணை மேயர் கவுன்சிலர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார். மேலும் விரைவில் கவுன்சிலர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்ற நல்ல செய்தி வரும் என்று மேயர் பிரியா கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!