
பொது டிக்கெட்டுகள் மூலம் பயணம் செய்பவரா நீங்கள்..?? அப்போ தவறுதலாக கூட இதை செய்யாதீங்க.. இந்தியன் ரயில்வே விதித்த புதிய விதி..!!
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் சாலைப் போக்குவரத்திற்கு அடுத்தபடியாக ரயில் போக்குவரத்து மிகவும் எளிதான மற்றும் ஆற்றலுடைய ஒன்றாக மக்களிடையே கருதப்படுகிறது. மேலும், ரயிலில் AC வகுப்பில் பயணிப்பது முன்பு கடினமானதாக இருந்த நிலையில் தற்போது AC வகுப்பில் டிக்கெட் கிடைப்பது மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் வெகுவாக அதிகரித்து வரும் AC வகுப்பு பயணம் குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, “நாளை (15-05-2025) முதல் பொது டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பயணிகள், செல்லுபடியாகும் ரயில் டிக்கெட் வைத்திருந்தாலும் ஸ்லீப்பர் மற்றும் AC பெட்டிகளில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஆனது முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், “பணியில்லா ரயில்வே ஊழியர்கள், முன்பதிவு செய்யப்படாத பயணிகள், அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்களுக்கும் இந்த விதியின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது”. இதை தொடர்ந்து, அங்கீகரிக்கப்படாத நுழைவைத் தடுப்பதன் மூலம், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தரங்களை சிறப்பாகக் கண்காணிக்க உதவுகிறதாக இந்தியன் ரயில்வே கூறுகிறது. மேலும், உங்கள் டிக்கெட்டுகள் காத்திருப்புப் பட்டியலில் இருந்தால், சாலைப் போக்குவரத்து அல்லது மாற்றுப் பயண விருப்பங்களைக் தேர்ந்தெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

























