இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ₹2.20 கோடி அபராதம் – RBI அறிவிப்பு!
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்ற தவறிய காரணத்தினால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ₹.2.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அபராதம்:
இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்கி வருகின்றனர். ஒவ்வொரு வங்கிகளுக்கான விதிமுறைகள் மற்றும் வட்டி விகிதங்கள் ஆகியவற்றையும் ரிசர்வ் வங்கி தான் அறிவுறுத்தி வருகிறது. மேலும், வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949 ன் சில விதிமுறைகளின் படி ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு இணங்க தவறிய வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதாவது, வருமான அங்கீகாரம், சொத்து வகைப்பாடு, வழங்குதல் விதிமுறைகள், வைப்புத்தொகை மீதான வட்டி விகிதங்கள் மற்றும் பல்வேறு அம்சங்களில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு இணங்காத வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் நடந்துள்ள பெரிய ரயில் விபத்துகள் – ஒரு பார்வை!
இந்நிலையில், தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 2020-21 நிதியாண்டுக்கான வெளிப்படுத்தப்பட்ட லாபத்தில் 25% க்கு சமமான கட்டாயத் தொகையை அதன் இருப்பு நிதிக்கு மாற்றத் தவறியதற்காகவும், ஏடிஎம்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த தவறியதற்காகவும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு இணங்க மறுத்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி ₹2.20 கோடி அபராதம் விதித்திருக்கிறது.