நாட்டில் நடந்துள்ள பெரிய ரயில் விபத்துகள் – ஒரு பார்வை!
ஒரே நேரத்தில் அதிக மக்கள் பயணிக்கும் ரயில் போக்குவரத்தில் ஏதேனும் அசாம்பவீதங்கள் நடக்கும் பட்சத்தில் அதற்கான பாதிப்பு பல மடங்கில் இருந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நாட்டில் நடந்துள்ள ரயில் விபத்துகளை குறித்த ஒரு விவரங்கள் பகிரப்பட்டுள்ளது.
ரயில் விபத்துகள்:
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பயணிக்கும் சூழல் உள்ளதால் ரயில் பயணங்கள் மூலம் நாட்டில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் பயணம் செய்கின்றனர். பேருந்து கட்டணத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு குறைவான கட்டணம் என்பதால், நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையை சேர்ந்தவர்கள் ரயில் பயணத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் நடந்த சில தவிர்க்க முடியாத ரயில் விபத்துகளின் விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உத்திரபிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் ஜூலை 7 2011 சாப்ரா – மதுரை ரயில் பேருந்து ஒன்றின் மீது மோதிய விபத்தில் 69 பேர் உயிரிழந்தனர்.
- டெல்லி சென்னை இடையிலான தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூர் அருகே தீப்பிடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் ஜூலை 30 2012 அன்று நடந்தது.
- உத்திர பிரதேசத்தில் மே 26 2018 அருகில் நின்றிருந்த சரக்கு ரயிலின் மீது மோதிய விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
டிகிரி தேர்ச்சி பெற்றவரா? Air Asia வில் உங்களுக்கான சூப்பர் வேலை || உடனே விண்ணப்பியுங்கள்!
- 2016 நவம்பர் 2020 அன்று இந்தூர் பட்னா எக்ஸ்பிரஸ், கான்பூரில் புக்ராயன் அருகே தடம் புரண்டது, இந்த விபத்தில் 150 பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 150க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
- மேற்கு வங்காளத்தின் அலிபுர்துவாரில் பிகானேர்-குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஜனவரி 13 2012 அன்று 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் ஒன்பது பேர் மரணம் அடைந்தனர் மற்றும் 36 பேர் படுகாயம் அடைந்தனர்.