TNPSC Preamble to the Indian Constitution in Tamil PDF 

0
TNPSC Preamble to the Indian Constitution in Tamil PDF 
TNPSC Preamble to the Indian Constitution in Tamil PDF 

TNPSC Preamble to the Indian Constitution in Tamil PDF 

“முகவுரை” (Preamble) என்பது  இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பின் அறிமுகம் ஆகும். இது அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகள் மற்றும் நோக்கங்களை வெளிப்படுத்துகிறது. 

முகவுரையின் வரலாறு ( History of Preamble) : 

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் முன்மொழியப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் குறிக்கோள்கள் பற்றிய தீர்மானத்தை, இந்த சபை ஜனவரி 22, 1947 ஏற்றுக்கொண்டது. இதன் அடிப்படையிலே அரசியலமைப்பின் முகவுரை அமைந்துள்ளது. மேலும், 42 வது சட்ட திருத்தத்தின் கீழ் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே முகவுரை திருத்தப்பட்டுள்ளது.

முகவுரையின் முக்கியக்கூறுகள் ( Components of the Preamble): 

 

முகவுரையானது இந்திய  குடிமக்களே அரசியலமைப்பு அதிகாரத்தின் ஆதாரம் என கூறுகிறது. மேலும், இந்த ஆதாரமானது இந்திய குடிமக்களின் உள் உறைந்துள்ளது என கூறுகிறது. 

இந்தியா ஒரு  இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பற்ற மற்றும்  ஜனநாயக குடியரசு கொண்ட நாடு என இந்திய அரசியலமைப்பின் தன்மையை முகவுரை குறிக்கிறது.

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமத்துவமான நீதி மற்றும் சுதந்திரம் வழங்கி குடிமக்களிடையே சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்ப்பதே அரசியலமைப்பின் நோக்கம் என முகவுரை கூறுகிறது 

மேலும், நவம்பர் 26, 1949 ஆம் தேதியன்று முகவுரை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC  Indian Constitution in Tamil PDF 

 

முகவுரையில் உள்ள முக்கிய வார்த்தைகள் (Keywords of Preamble) : 
  • இந்திய மக்களாகிய நாம் (We, the people of India): இந்த சொல் இந்திய மக்களுக்கு  இந்திய அரசியலமைப்பின் மீதுள்ள உச்சபட்ச அதிகாரத்தையும் உரிமையையும்  குறிக்கிறது. 
  • இறையாண்மை (Sovereign) : இது இந்தியா என்பது  யார் ஒருவரின் தலையீடும் அற்ற சுதந்திரமான நாடு என்பதை எடுத்துரைக்கிறது. நாட்டில், சில கட்டுப்பாடுகளுடன் சட்டமன்றங்களே சட்டத்தை இயற்றும் அதிகாரம் கொண்டது என கூறுகிறது. 
  • சோசலிஸ்ட் (Socialist) : இது பொருளாதாரம், அரசியல், சமூகம் என அனைத்து வகையிலும் ஒவ்வொரு குடிமகனும் சமுதாயத்தில் சமமான வாய்ப்பு பெறுவதை இது குறிக்கிறது.
  • மதச்சார்பற்றது (Seculer) : இந்த வார்த்தை இந்தியாவில் அனைத்து மதங்களும் சமமான மரியாதை, பாதுகாப்பு மற்றும் ஆதரவு பெறுவதை வலியுறுத்திக்கிறது.
  • ஜனநாயகம் (Democratic) : இந்த வார்த்தை இந்தியா,  ஒரு நிறுவப்பட்ட அரசியலமைப்பினை கொண்டுள்ளதையும், மக்களின் வாக்களிப்பை அடிப்படையாக கொண்டே  இங்கு  அரசாங்கம் உருவாக்கப்படுவதையும் வலியுறுத்துகிறது.
  • குடியரசு (Republic) : இந்தியாவில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதையும், இந்திய குடியரசு தலைவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதையும் உறுதி செய்கிறது. 
முகவுரையின் நோக்கங்கள் (Objectives of Preamble) : 

இந்திய அரசியலமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டதாகும். இது  சமூகத்தில் ஒருமைப்பாட்டை பேணவும்,  குடிமக்களிடையே ஒற்றுமையை  வளர்க்கவும்  மற்றும் சிறந்த தேசத்தை உருவாக்கவும் உதவுகிறது. மேலும், இதனை அடைவதில் கீழுள்ள காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

  • நீதி (Justice) : சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் போன்ற அனைத்து நிலைகளிலும் அரசு கொள்கைகளை வழிகாட்டும் கோட்பாடுகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் மற்றும் இந்திய அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை வழங்கி சமூகத்தில் ஒழுங்கை பராமரிப்பதாகும்.  
  • சமத்துவம் (Equality) : சமத்துவம் என்பது எந்த வித ஏற்ற தாழ்வுகளும் பாகுபாடுமின்றி,  சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சரி சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கூறுகிறது.
  • சுதந்திரம் (Liberty) : இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தங்களுக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்கும், அரசியல் கருத்துக்களை கொண்டிருப்பதற்கும்  மற்றும் தங்களுக்கு பிடித்தார் போல சமூகத்தில் நடந்து கொள்வதற்கான சுதந்திரத்தை குறிக்கிறது. மேலும், “சுதந்திரம்” என்பது என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்பதை குறிக்கவில்லை. மாறாக, சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் மட்டுமே , ஒரு நபர் தனக்கு பிடித்ததை செய்ய முடியும் என்பதை குறிக்கிறது. 
  • சகோதரத்துவம் (Fraternity) : சகோதரத்துவம் என்ற  சொல், நாட்டுடனும், நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுடன் உள்ள ஒரு உணர்ச்சி பூர்வமான பற்றுதலை குறிக்கிறது. மேலும், இந்த சகோதரத்துவ உணர்வு, நாட்டின் ஒற்றுமையையும், கண்ணியத்தையும் வளர்க்க உதவுகிறது. 

TNPSC Polity Study Materials in Tamil – PDF Download 

அரசியலமைப்பில் முகவுரையின் நிலை (Status of Preamble)  :

அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் முகவுரையின் நிலை குறித்து பலமுறை உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதோடு தொடர்புடைய சில முக்கிய வழக்குகளை கீழே காண்போம். 

பெருபாரி வழக்கு (1960) : 

இந்த வழக்கில் 8 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்திய – பாகிஸ்தான் இடையேயான ஒப்பந்தத்தை செயல்படுத்துவதை குறித்து பரிசீலித்தது. அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றம் “ முகவுரை என்பது தயாரிப்பாளர்களின் மனதை திறக்கும் திறவுகோல் மட்டுமே, இதை அரசியலமைப்பின் ஒரு பகுதியாக கருத முடியாது” என்றும், “ இதை நீதிமன்றத்தால் செயல்படுத்த முடியாது” என்றும் தெரிவித்தது.  

கேசவானந்த பாரதி வழக்கு : 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளின் அமர்வு , “இனிமேல் அரசியலமைப்பின் முகவுரை, அரசியலமைப்பின் ஒரு பகுதியாக கருதப்படும்” என்றும், “ஆனால், அதற்கென எந்த ஒரு உச்சபட்ச அதிகாரமோ, கட்டுப்பாடோ இல்லை என்றும், அரசியலமைப்பின் சட்ட விதிகளை விளக்குவதில் மட்டுமே முக்கிய பங்காற்றும்” என தெரிவித்தனர். மேலும், இந்த ரிட் வழக்கை விசாரிக்க, வரலாற்றில் முதல்முறையாக 13 நீதிபதிகள் கொண்ட அமர்வு கூடியது அதுவே முதல்முறையாகும். 

ஒன்றிய அரசு vs LIC வழக்கு:

1995 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வழக்கிலும், உச்சநீதி மன்றம் மீண்டும் ஒரு “முகவுரை இந்திய அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பகுதி என்று வலியுறுத்தியது. ஆனால், இதனை எந்த ஒரு நீதிமன்றத்தாலும் அமல்படுத்த முடியாது” என்றும், தெரிவித்தது. 

முகவுரையின் சட்டத்திருத்தம் (Amendments of Preamble) :
  • கேசவானந்த பாரதி வழக்கின் பின், 42 வது சட்டதிருத்தத்தின் அடிப்படையில், 368 வது அரசியலமைப்பு பிரிவின் கீழ், “அரசியலமைப்பின் அடிப்படைத்தன்மையை மாற்றாமலே, முகவுரை திருத்த அனுமதி அளிக்கிறது”. மேலும், இந்த சட்டத்திருத்தம் கேசவானந்த பாரதி வழக்கில் குறிப்பிட்ட,  “முகவுரை, அரசியலமைப்பின் ஒரு  ஒருங்கிணைந்த பகுதியாக மட்டுமே கருதப்படும்” என்பதை வலியுறுத்துகிறது. 
  • மேலும், இந்த  42 வது சட்டதிருத்தத்தின் அடிப்படையில், முகவுரையில் சோசலிஸ்ட், மதச்சார்பற்ற  மற்றும் ஒருமைப்பாடு என்னும் சொற்கள் சேர்க்கப்பட்டன. இது, தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை குறிக்கிறது.
  • மேலும்,  42 வது சட்டதிருத்தம், 1976 இன் கீழ் இதுவரை வரலாற்றில் ஒருமுறை மட்டுமே முகவுரை திருத்தப்பட்டுள்ளது. 
 பிற முக்கிய தகவல்கள் ( Important Facts) : 

நமது முகவுரையில் உள்ள “சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்” போன்ற கருத்துகள் பிரெஞ்ச் புரட்சியின் நோக்கங்களில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். 

PDF Download 

 Join the ExamsDaily WhatsApp Group

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!