நாடு முழுவதும் ரயில் சேவைகள் ரத்து? ரயில்வே வாரியம் விளக்கம்!!

0
நாடு முழுவதும் ரயில் சேவைகள் ரத்து? ரயில்வே வாரியம் விளக்கம்!!
நாடு முழுவதும் ரயில் சேவைகள் ரத்து? ரயில்வே வாரியம் விளக்கம்!!
நாடு முழுவதும் ரயில் சேவைகள் ரத்து? ரயில்வே வாரியம் விளக்கம்!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வரும் நேரத்திலும், ரயில் சேவைகளை நிறுத்துவது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம், மாநில அரசுகள் கோரிக்கை வைக்கவில்லை என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

ரயில் சேவைகள் நிறுத்தம்:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுக்க மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. முழு ஊரடங்கு காரணமாக வெளி மாநில தொழிலாளர்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்தனர். அதனால் அவர்களுக்கு மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் படிப்படியாக குறைந்த, கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் அதிவேக ரயில்கள் மட்டும் முக்கிய வழித்தடங்களுக்கு இயக்கப்பட்டன. தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமெடுத்து வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் – ஜூலை மாதம் முதல் வழங்கல்!!

அதனால் முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் நிறுத்தப்படுமா என ரயில்வே நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து பேசிய ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா கூறியதாவது,

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த திட்டம் – ஓரிரு நாட்களில் அறிவிப்பு!!

“நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. ரயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதை தடுக்க ரயில்வே நடைபாதை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.

மருத்துவர் தகுதிக்கான FMGE நுழைவுத் தேர்வு விண்ணப்ப பதிவு – மே 6 கடைசி நாள்!!

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 4000 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் மாநிலங்களில் இருந்து கூடுதல் ரயில்களை இயக்க, மண்டல பொது மேலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ரயில்களுக்கு பற்றாக்குறை எதுவும் இல்லாமல் உள்ளது. நாட்டில் தற்போது 70 சதவிகித ரயில்கள் இயங்கி வருகின்றன.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து ரயில் சேவையை ரத்து செய்யக்கோரி எந்த கோரிக்கையும் வழங்கப்படவில்லை. மேலும் ரயில் பயணம் செய்யப்படும் போது கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டுமா என்ற தகவல்கள், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளங்களில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!