மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் – ஜூலை மாதம் முதல் வழங்கல்!!
நாடு முழுவதும் கொரோனா காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் கிராக்கிப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் போன்றவற்றிற்காக காத்திருக்கும் நேரத்தில் நைட் டியூட்டிக்கான கூடுதல் சம்பளம் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா காரணமாக 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் கிராக்கிப்படி மற்றும் அகவிலைபடி 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்கனவே வழங்கப்பட இருந்த நிவாரணத்தொகை மற்றும் கூடுதல் அகவிலைப்படி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு நைட் டியூட்டிக்கான கூடுதல் சம்பளம் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 7வது சம்பள கமிஷன் அடிப்படையில் கடந்த நிதியாண்டு முதல் பர்சனல் மற்றும் பயிற்சி துறை இரவு நேர பணிக்காகக் கொடுப்பனவு அளிக்கும் வரைமுறையை வெளியிட்டது.
மருத்துவர் தகுதிக்கான FMGE நுழைவுத் தேர்வு விண்ணப்ப பதிவு – மே 6 கடைசி நாள்!!
ஆனால் கொரோனா காரணமாக DA, DR மற்றும் நைட் டியூட்டிக்கான ஊதியம் போன்றவை நிறுத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது ஜூலை மாதத்தில் இவை அனைத்தும் சேர்த்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முழு விளக்கத்தை மத்திய அரசு ஜூலை மாதத்தில் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rich man going going rich, poor EPS 95 pension getting persons going going poor. This is PM Modi’s big and worst action.