தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த திட்டம் – ஓரிரு நாட்களில் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் 2வது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது குறித்து நேற்று தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் அவர்களின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இரவு நேர ஊரடங்கினை அமல்படுத்துவது குறித்து திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இரவு நேர ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது வரை பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. ஆரம்பத்தில் கடும் விதிமுறைகளுடன் பொதுமுடக்கம் பின்பற்றப்பட்டதால் கொரோனா பரவல் ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். தொழில் துறைகளும் முழுவீச்சில் செயல்பட தொடங்கியது. தற்போது கொரோனா 2வது அலை தீவிரமடைய தொடங்கி உள்ளது.
TN Police Constable PET/PMT தேர்வு – கொரோனா சான்று கட்டாயம்!!
நாள் ஒன்றுக்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் கடந்த ஏப்ரல் 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் நோய்த்தொற்று கட்டுக்குள் வரவில்லை. எனவே பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை தமிழகத்தில் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அது தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் தலைமையில் நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த வார இறுதி நாட்கள் அல்லது இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் அத்தியாவசிய தேவைகள் தவிர பிற கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகள் விதித்தல், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? தலைமை செயலர் ஆலோசனை!
இதனால் தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு விதித்தல் உள்ளிட்ட அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் வார இறுதி நாட்கள், கொரோனா அதிகமுள்ள மாவட்டங்களில் போன்றவற்றில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.